திங்கள், 31 மார்ச், 2014

ஞாயிறு, 30 மார்ச், 2014

ஞாயிறு நற்சிந்தனை

நம் மனதில் தெளிவான பார்வை இல்லாதபோது வாழ்வில் நாம் செல்லுகின்ற பாதை தடம் மாறுகின்ற நிலை உருவாகின்றது. நானே உண்மையும், ஒளியும், உயிரும் என்று சொன்ன நம் ஆண்டவர் இயேசுவின் வழியில் வாழந்து, அதனால் நிலை வாழ்வில் என்றும் இறைவனில் மகிழ்ந்து வாழ நம் இதயத்திலும், சிந்தனையிலும் தெளிவான பார்வை பெற இறைத் தந்தையின் அருள் வரம் கேட்டு மன்றாடுவோம்.

சனி, 29 மார்ச், 2014

வெள்ளி, 28 மார்ச், 2014

வியாழன், 27 மார்ச், 2014

இன்றைய வாசகம்.

முதல் வாசகம்

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 7: 23-28

புதன், 26 மார்ச், 2014

செவ்வாய், 25 மார்ச், 2014

இன்றைய வாசகம்.

முதல் வாசகம்

இதோ, கருவுற்றிருக்கும் அந்த கன்னிப் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 7: 10-14; 8: 10b


திங்கள், 24 மார்ச், 2014

ஞாயிறு, 23 மார்ச், 2014

பாதுகாவல் புனிதர்கள்

கத்தோலிக்கத் திருச்சபையில் தூய்மையான வாழ்வும், தியாக உள்ளமும், அர்ப்பணிப்பும் தன்னகத்தே கொண்டு கற்பு நெறியுடன் வாழ்ந்து, சோதனைகளிலும், துன்பவேளைகளிலும் தளராத இறைனம்பிக்கையுடன் திகழ்ந்தவர்களைத்தான் திருச்சபை புனிதர்களாக உயர்த்துகிறது. இறைவனோடு ஒன்றித்திருக்கும் அப்புனிதர்களிடம் நாம் விசுவாச பிரமாணத்தின்படி நமது தேவைகளுக்காக இறைவனிடம் பரிந்துரைக்கச் சொல்லி செபிக்க வேண்டும். அவ்வாறு செபிக்க உதவியாக பாதுகாவலர்களாக உள்ள புனிதர்களின் குறிப்பும், அவர்கள் எதற்க்கெல்லாம் பாதுகாவலர்களாக உள்ளனர் என்பதையும் சுருக்கமாக சொல்லிடுருக்கிறேன். மேலும் அந்தந்த புனிதர்களின் திருவிழா நாட்களையும்.அவர்கள் வாழ்ந்த காலத்தையும் குறிப்பிட்டுள்ளேன். செபிப்போம் ! செழிப்போம் !!

ஞாயிறு நற்சிந்தனை

                                தவக்காலத்தின் மூன்றாம் வாரத்திலிருக்கிறோம். முதல் வாரத்தில் பாலை வனத்திற்கு அழைத்துச் சென்ற இயேசு கடந்த வாரம் மலைக்கு அழைத்துச்சென்றார். இந்த வாரம் தண்ணீர் உள்ள ஒரு கிணற்றுக்கு நம்மை அழைக்கிறார். மனிதர்களாகிய நாம் தனி மரம்போல் வாழ்வதில்லை. பிறரோடு ஒன்றிணைந்து ஒரு சமுதாயமாகவே வாழ்ந்திடமுடியும். அதிலும் கிறிஸ்தவர்களாகிய நாம் விசுவாசத்திலும், அன்பிலும் இணைந்து: இயேசுவுக்குள் இணைந்து வாழும் புனித திருச்சபை என்னும் இறை சமூகமாகத் திகழ்கின்றோம். நமது சமுதாய வாழ்வில் உண்மையான அன்புக்காக, ஆதரவுக்காக ஏங்கித் தவிக்கும் நம் சகோதர சகோதரிகளில் கிறிஸ்து இயேசுவை இனங் கண்டு கொள்வோம்.

முதல் வாசகம்
விடுதலைப்பயண நூல் 17:3-7
அங்குத் தண்ணீரின்றித் தவித்ததால் மக்கள் மோசேயை எதிர்த்து முறுமுறுத்து, "நீர் எகிப்திலிருந்து எங்களை வெளியேறச் செய்தது எங்களையும், எங்கள் பிள்ளைகளையும் கால்நடைகளையும் தாகத்தால் சாகடிக்கவா?" என்று கேட்டனர். மோசே ஆண்டவரிடம், "இந்த மக்களோடு நான் என்ன செய்வேன்? இன்னும் கொஞ்சம் போனால் என்மேல் கல்லெறிவார்களே!" என்று கதறினார். ஆண்டவர் மோசேயிடம், "இஸ்ரயேல் தலைவர்கள் சிலரை உன்னோடு அழைத்துக்கொண்டு மக்கள் முன் செல்; நைல்நதியை அடித்த உன் கோலையும் கையில் எடுத்துக் கொண்டு போ. இதோ நான் அங்கே ஓரேபில் உள்ள பாறையில் உனக்குமுன் நிற்பேன். நீ பாறையை அடி; மக்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும்" என்றார். இஸ்ரயேல் தலைவர்கள் காண மோசே அவ்வாறே செய்தார். இஸ்ரயேல் மக்கள் அங்கு வாதாடியதாலும் ஆண்டவர் தம்மோடு இருக்கிறாரா இல்லையா என்று சோதித்ததாலும், அவ்விடம் "மாசா" என்றும் "மெரிபா" என்றும் பெயரிட்டழைக்கப்பட்டது.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு. 

இரண்டாம் வாசகம்
தூய பவுல் உரோமையருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 5:1-2, 5-8
ஆகையால் நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் மூலம் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகியுள்ள நாம், நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் வழியாய்க் கடவுளோடு நல்லுறவு கொண்டுள்ளோம். நாம் இப்போது அருள்நிலையைப் பெற்றிருக்கிறோம். இந்நிலையை அடையும் உரிமை இயேசு கிறிஸ்துமீது கொண்ட நம்பிக்கையால் தான் அவர் வழியாகவே நமக்குக் கிடைத்தது. கடவுளின் மாட்சியில் பங்குபெறுவோம் என்னும் எதிர்நோக்கில் நாம் பெருமகிழ்வும் கொள்ள முடிகிறது. அந்த எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது; எனெனில் நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது. நாம் இறைப்பற்று இன்றி வலுவற்று இருந்தபோதே, குறித்தகாலம் வந்ததும் கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். நேர்மையாளருக்காக ஒருவர் தம் உயிரைக் கொடுத்தலே அரிது. ஒருவேளை நல்லவர் ஒருவருக்காக யாரேனும் தம் உயிரைக் கொடுக்கத் துணியலாம். ஆனால், நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக் காட்டியுள்ளார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு. 

நற்செய்தி வாசகம்:
தூய யோவான் எழுதிய நற்செய்தி 17:5-42

அவர் சமாரியாவில் உள்ள சிக்கார் என்னும் ஊருக்கு வந்து சேர்ந்தார். யாக்கோபு தம் மகன் யோசேப்புக்குக் கொடுத்த நிலத்துக்கு அருகே அந்த ஊர் இருந்தது. அவ்வூரில் யாக்கோபின் கிணறும் இருந்தது. பயணத்தால் களைப்புற்றிருந்த இயேசு கிணற்று ஓரமாய் அமர்ந்தார். அப்போது ஏறக்குறைய நண்பகல். அவருடைய சீடர் உணவு வாங்குவதற்காக நகருக்குள் சென்றிருந்தனர். சமாரியப் பெண் ஒருவர் தண்ணீர் மொள்ள வந்தார். இயேசு அவரிடம், "குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்" என்று கேட்டார். அச் சமாரியப் பெண் அவரிடம், "நீர் யூதர்; நானோ சமாரியப் பெண். நீர் என்னிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது எப்படி?" என்று கேட்டார். ஏனெனில் யூதர்கள் சமாரியரோடு பழகுவதில்லை. இயேசு அவரைப் பார்த்து, "கடவுளுடைய கொடை எது என்பதையும் "குடிக்கத் தண்ணீர் கொடும்" எனக் கேட்பவர் யார் என்பதையும் நீர் அறிந்திருந்தால் நீரே அவரிடம் கேட்டிருப்பீர்; அவரும் உமக்கு வாழ்வு தரும் தண்ணீரைக் கொடுத்திருப்பார்" என்றார். அவர் இயேசுவிடம், "ஐயா, தண்ணீர் மொள்ள உம்மிடம் ஒன்றுமில்லை; கிணறும் ஆழமானது. அப்படியிருக்க வாழ்வு தரும் தண்ணீர் உமக்கு எங்கிருந்து கிடைக்கும்? எம் தந்தை யாக்கோபை விட நீர் பெரியவரோ? அவரே எங்களுக்கு இக்கிணற்றை வெட்டித் தந்தார். அவரும் அவருடைய மக்களும் கால்நடைகளும் இதிலிருந்துதான் தண்ணீர் குடிப்பது வழக்கம்" என்றார். இயேசு அவரைப் பாhத்து, "இந்தத் தண்ணீரைக் குடிக்கும் ஒவ்வொருவருக்கும் மீண்டும் தாகம் எடுக்கும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது; நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும்" என்றார். அப்பெண் அவரை நோக்கி, "ஐயா, அத்தண்ணீரை எனக்குக் கொடும்; அப்போது எனக்குத் தாகமும் எடுக்காது; தண்ணீர் மொள்ள நான் இங்கு வரத்தேவையும் இருக்காது" என்றார். இயேசு அவரிடம், "நீர் போய், உம் கணவரை இங்கே கூட்டிக் கொண்டு வாரும்" என்று கூறினார். அப்பெண் அவரைப் பார்த்து, "எனக்குக் கணவர் இல்லையே" என்றார். இயேசு அவரிடம், "எனக்குக் கணவர் இல்லை" என நீர் சொல்வது சரியே. உமக்கு ஐந்து கணவர்கள் இருந்தார்கள் என்றாலும் இப்போது உம்முடன் இருப்பவர் உம் கணவர் அல்ல. எனவே நீர் கூறியது உண்மையே" என்றார். அப்பெண் அவரிடம், "ஐயா, நீர் ஓர் இறைவாக்கினர் எனக் கண்டுகொண்டேன். எங்கள் முன்னோர் இம்மலையில் வழிபட்டுவந்தனர். ஆனால் நீங்கள் எருசலேமில்தான் வழிபட வேண்டும் என்கிறீர்களே" என்றார். இயேசு அவரிடம், "அம்மா, என்னை நம்பும். காலம் வருகிறது. அப்போது நீங்கள் தந்தையை இம்மலையிலோ எருசலேமிலோ வழிபடமாட்டீர்கள். யாரை வழிபடுகிறீர்கள் எனத் தெரியாமல் நீங்கள் வழிபடுகிறீர்கள். ஆனால் நாங்கள் தெரிந்து வழிபடுகிறோம். யூதரிடமிருந்தே மீட்பு வருகிறது. காலம் வருகிறது; ஏன், வந்தேவிட்டது! அப்போது உண்மையாய் வழிபடுவோர் தந்தையை அவரது உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில் வழிபடுவர். கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில்தான் வழிபட வேண்டும்" என்றார். அப்பெண் அவரிடம், "கிறிஸ்து எனப்படும் மெசியா வருவார் என எனக்குத் தெரியும். அவர் வரும்போது அனைத்தையும் எங்களுக்கு அறிவிப்பார்" என்றார். இயேசு அவரிடம், "உம்மோடு பேசும் நானே அவர்" என்றார். அந்நேரத்தில் இயேசுவின் சீடர் திரும்பி வந்தனர். பெண் ஒருவரிடம் அவர் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு அவர்கள் வியப்புற்றனர். எனினும் "என்ன செய்ய வேண்டும்?" என்றோ, "அவரோடு என்ன பேசுகிறீர்?" என்றோ எவரும் கேட்கவில்லை. அப்பெண் தம் குடத்தை விட்டுவிட்டு ஊருக்குள் சென்று மக்களிடம், "நான் செய்த எல்லாவற்றையும் என்னிடம் சொன்ன மனிதரை வந்து வாருங்கள். அவர் மெசியாவாக இருப்பாரோ!" என்றார். அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு இயேசுவிடம் வந்தார்கள். அதற்கிடையில் சீடர், "ரபி, உண்ணும்" என்று வேண்டினர். இயேசு அவர்களிடம், "நான் உண்பதற்குரிய உணவு ஒன்று உண்டு. அது உங்களுக்குத் தெரியாது" என்றார். "யாராவது அவருக்கு உணவு கொடுத்திருப்பார்களோ" என்று சீடர்கள் தங்களிடையே பேசிக்கொண்டார்கள். இயேசு அவர்களிடம், "என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு. "நான்கு மாதங்களுக்குப் பின்தான் அறுவடை" என்னும் கூற்று உங்களிடையே உண்டே! நிமிர்ந்து வயல்வெளிகளைப் பாருங்கள். பயிர் முற்றி அறுவடைக்குத் தயாராய் உள்ளது. அறுப்பவர் கூலி பெறுகிறார்; நிலைவாழ்வு பெறுவதற்காக மக்களைக் கூட்டிச் சேர்க்கிறார். இவ்வாறு விதைப்பவரும் அறுப்பவரும் ஒருமிக்க மகிழ்ச்சியடைகின்றனர். நீங்கள் உழைத்துப் பயிரிடாததை அறுவடை செய்ய நான் உங்களை அனுப்பினேன். மற்றவர்கள் உழைத்தார்கள்; ஆனால் நீங்கள் அந்த உழைப்பின் பயனை அடைந்தீர்கள். இவ்வாறு "விதைப்பவர் ஒருவர்; அறுவடை செய்பவர் வேறு ஒருவர்" என்னும் கூற்று உண்மையாயிற்று" என்றார். "நான் செய்தவை அனைத்தையும் என்னிடம் சொன்னார்" என்று சான்று பகர்ந்த பெண்ணின் வார்த்தையை முன்னிட்டு அவ்வூரிலுள்ள சமாரியர் பலர் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர். சமாரியர் அவரிடம் வந்தபோது அவரைத் தங்களோடு தங்குமாறு கேட்டுக்கொண்டனர். அவரும் அங்கு இரண்டு நாள் தங்கினார். அவரது வார்த்தையை முன்னிட்டு இன்னும் பலர் அவரை நம்பினர். அவர்கள் அப்பெண்ணிடம், "இப்போது உன் பேச்சைக் கேட்டு நாங்கள் நம்பவில்லை; நாங்களே அவர் பேச்சைக் கேட்டோம். அவர் உண்மையிலே உலகின் மீட்பர் என அறிந்து கொண்டோம்" என்றார்கள்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி



சனி, 22 மார்ச், 2014

இன்றைய வாசகம்.

முதல் வாசகம்

இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 7: 14-15, 18-20


வெள்ளி, 21 மார்ச், 2014

வியாழன், 20 மார்ச், 2014

இன்றைய வாசகம்.

முதல் வாசகம்

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 17: 5-10 

புதன், 19 மார்ச், 2014

செவ்வாய், 18 மார்ச், 2014

திங்கள், 17 மார்ச், 2014

இன்றைய வாசகம்

முதல் வாசகம்

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 9: 4-11


ஞாயிறு, 16 மார்ச், 2014

அழியா சரிரம் கொண்ட புனிதர்கள்

            அழியா சரிரம் கொண்ட புனிதர்கள் அழியா சரிரம் என்று சொன்னால் அது உடலில் இருந்து உயிர் பிரிந்து பல நாட்கள் அல்லது வருடங்கள்  ஆகியும் அந்த உடல் அழியாமல் இருப்பது ஆகும். கத்தோலிக்க திருச்சபையில் பல புனிதர்கள் உடல் இன்னும் அழியாமல் எப்படி இறந்தார்களோ அப்படியே இன்னும் உள்ளது..

ஞாயிறு நற்சிந்தனை


File:Pietro Perugino cat52c.jpgஇயேசுவின் தோற்றம் மாறியதையும் வானிலிருந்து குரல் எழுந்து இயேசுவைக் கடவுளின் மகன் என அடையாளம் காட்டியதையும் கண்டு, கேட்டு அனுபவித்த சீடர்கள் அதன் விளைவாக முகங்குப்புற விழுகிறார்கள். அவர்களை அச்சம் மேற்கொள்கிறது. அப்போது ''இயேசு அவர்களிடம் வந்து, அவர்களைத் தொட்டு, 'எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்' என்றார்'' (மத் 17:7). கடவுள் நம்மைத் தம்மிடம் ஈர்க்கின்ற சக்தி கொண்டவர்; நம் உள்ளம் அவரை நாடித் தேடுகிறது. அதே நேரத்தில் கடவுளின் பிரசன்னத்தில் நாம் அஞ்சி நடுங்குகிறோம். ஆனால் இயேசு நாம் அஞ்சவேண்டியதில்லை என நமக்கு உறுதியளிக்கிறார். அவரோடு நாம் இருக்கும்போது நம் வாழ்வில் அச்சம் நீங்கும்; நம் உள்ளத்தில் உறுதி பிறக்கும்.

முதல் வாசகம்

தொடக்க நூலிலிருந்து வாசகம் 12: 1-4

சனி, 15 மார்ச், 2014

வெள்ளி, 14 மார்ச், 2014

இன்றைய வாசகம்

முதல் வாசகம்
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 18: 21-28 

வியாழன், 13 மார்ச், 2014

புதன், 12 மார்ச், 2014

செவ்வாய், 11 மார்ச், 2014

திங்கள், 10 மார்ச், 2014

ஞாயிறு, 9 மார்ச், 2014

ஞாயிறு நற்சிந்தனை

ஒவ்வொரு ஆண்டும் தவக்காலத்தின் முதல் ஞாயிறு இயேசு சோதனைகளைச் சந்தித்த நிகழ்வைச் சிந்திக்க திருச்சபை நம்மை அழைக்கிறது. தவத்தின் அடையாளங்களை அணிந்து நோன்பு நாட்களைத் தொடங்கியிருக்கிற உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறேன்.நாம் தொடங்கியிருக்கும் இந்தத் தவக்காலம், இறைவனின் அன்பை நாம் அதிகமாக உணரவும், நம் தவறுகளையும, பாவங்களையும் ஏற்று மனம் வருந்தி மன்னிப்பை அடைந்து புதிய வாழ்வை - புனித வாழ்வை பெறவும், இறை உறவில் - பிறர் உறவில் வளரவும், வாழவும் இறைவன் நமக்கு அருளுகின்ற தனிப்பெரும் கொடையாகும். இந்த நாட்களில் உண்மையான மனமாற்றம் பெறுவோம், என்றுமே இறைத் தந்தையின் விருப்பம் நிறைவேற்றி வாழ்வோம்.

சனி, 8 மார்ச், 2014

இன்றைய வாசகம்

 முதல் வாசகம் 
 இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 58: 9b-14  

வெள்ளி, 7 மார்ச், 2014

வியாழன், 6 மார்ச், 2014

புதன், 5 மார்ச், 2014

செவ்வாய், 4 மார்ச், 2014

தவக்கால சிந்தனை

          
   கிறிஸ்தவர்களுக்கு தவக்காலம் மிகவும் முக்கியமான ஒரு காலம். சாம்பல் புதன் தொடங்கி உயிர்ப்பு பெருநாள் வரை இந்த தவக்காலம் அமைகிறது.



இன்றைய வாசகம்

முதல் வாசகம்

திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 10-16

திங்கள், 3 மார்ச், 2014

இன்றைய வாசகம்

முதல் வாசகம்

திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 3-9 

ஞாயிறு, 2 மார்ச், 2014

சனி, 1 மார்ச், 2014

இன்றைய வாசகம்

முதல் வாசகம்

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 13-20