இன்று பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு. நம் பக்கம்
சாய்ந்து நமது மன்றாட்டைக் கேட்டருளும் நம் ஆண்டவர் இயேசுவின்
சந்நிதானத்தில் பலி செலுத்த ஒன்று கூடியுள்ளோம்.
உலகம் முழுவதும் அவருடைய மீட்பை அடைவதற்கு நம்மைப் பிற இனத்தாருக்கு
ஒளியாகவும்
ஏற்படுத்துவேன் எனக் கூறுவதன் மூலம் இயேசு கிறிஸ்துவோடு இணைக்கப்பெற்றுத்
தூயோராக்கப்பட்டு இறைமக்களாக இருக்க அழைக்கப்பட்டுள்ள நம்மிடம்,
எல்லா இடங்களிலும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறிக்கையடும் பொறுப்பை
ஒப்படைக்கின்றார்.
பலியையும் காணிக்கையையும் அவர் விரும்பவில்லை: எரிபலியையும் பாவம் போக்கும்
பலியையும் அவர் கேட்கவில்லை:
நம்முடைய தூய்மையான வாழ்வையும், பணி வாழ்வையுமே அவர் விரும்புகின்றார்.