இன்று பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு. நம் பக்கம்
சாய்ந்து நமது மன்றாட்டைக் கேட்டருளும் நம் ஆண்டவர் இயேசுவின்
சந்நிதானத்தில் பலி செலுத்த ஒன்று கூடியுள்ளோம்.
உலகம் முழுவதும் அவருடைய மீட்பை அடைவதற்கு நம்மைப் பிற இனத்தாருக்கு
ஒளியாகவும்
ஏற்படுத்துவேன் எனக் கூறுவதன் மூலம் இயேசு கிறிஸ்துவோடு இணைக்கப்பெற்றுத்
தூயோராக்கப்பட்டு இறைமக்களாக இருக்க அழைக்கப்பட்டுள்ள நம்மிடம்,
எல்லா இடங்களிலும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறிக்கையடும் பொறுப்பை
ஒப்படைக்கின்றார்.
பலியையும் காணிக்கையையும் அவர் விரும்பவில்லை: எரிபலியையும் பாவம் போக்கும்
பலியையும் அவர் கேட்கவில்லை:
நம்முடைய தூய்மையான வாழ்வையும், பணி வாழ்வையுமே அவர் விரும்புகின்றார்.
எனவே நாம் அனைவரும் உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது, உமது திருவுளம் நிறைவேற்ற ஆண்டவரே, இதோ வருகின்றேன். என்னும் இலட்சிய தாகத்தை இதயத்தில் சுமந்து சென்று இறைவனை மகிமைப்படுத்துவோம், இறைவனின் சாட்சிகளாய் வாழ்வோம்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 49: 3.5-6 ஆண்டவர் என்னிடம், `நீயே என் ஊழியன், இஸ்ரயேலே! உன் வழியாய் நான் மாட்சியுறுவேன்' என்றார். யாக்கோபைத் தம்மிடம் கொண்டு வரவும், சிதறுண்ட இஸ்ரயேலை ஒன்று திரட்டவும் கருப்பையிலிருந்தே ஆண்டவர் என்னைத் தம் ஊழியனாக உருவாக்கினார். ஆண்டவர் பார்வையில் நான் மதிப்புப் பெற்றவன்; என் கடவுளே என் ஆற்றல்; அவர் இப்பொழுது உரைக்கிறார்: அவர் கூறுவது: யாக்கோபின் குலங்களை நிலைநிறுத்துவதற்கும் இஸ்ரயேலில் காக்கப்பட்டோரைத் திருப்பிக் கொணர்வதற்கும் நீ என் ஊழியனாக இருப்பது எளிதன்றோ? உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் ஏற்படுத்துவேன்.
எனவே நாம் அனைவரும் உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது, உமது திருவுளம் நிறைவேற்ற ஆண்டவரே, இதோ வருகின்றேன். என்னும் இலட்சிய தாகத்தை இதயத்தில் சுமந்து சென்று இறைவனை மகிமைப்படுத்துவோம், இறைவனின் சாட்சிகளாய் வாழ்வோம்.
முதல் வாசகம்
உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் ஏற்படுத்துவேன்.இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 49: 3.5-6 ஆண்டவர் என்னிடம், `நீயே என் ஊழியன், இஸ்ரயேலே! உன் வழியாய் நான் மாட்சியுறுவேன்' என்றார். யாக்கோபைத் தம்மிடம் கொண்டு வரவும், சிதறுண்ட இஸ்ரயேலை ஒன்று திரட்டவும் கருப்பையிலிருந்தே ஆண்டவர் என்னைத் தம் ஊழியனாக உருவாக்கினார். ஆண்டவர் பார்வையில் நான் மதிப்புப் பெற்றவன்; என் கடவுளே என் ஆற்றல்; அவர் இப்பொழுது உரைக்கிறார்: அவர் கூறுவது: யாக்கோபின் குலங்களை நிலைநிறுத்துவதற்கும் இஸ்ரயேலில் காக்கப்பட்டோரைத் திருப்பிக் கொணர்வதற்கும் நீ என் ஊழியனாக இருப்பது எளிதன்றோ? உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் ஏற்படுத்துவேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக